ஒன்றுமே சொல்லாமல்
வெகுதூரம் பிரிந்து
சென்ற பின் மெல்ல
படபடத்து பிரிவின்
வலியை உணர்ந்ததா
என் கையில் இன்னும்
நூல் வழியாய் துடித்து
கொண்டிருக்கும் என்
நீல நிற காத்தாடி??
Saturday, May 15, 2010
Tuesday, May 11, 2010
முதிர்ச்சி
பயணங்களின் நடுவில்
இளைப்பாற அமரும்போது கண்கள்
நம்மை கேட்காமல் வந்த வழி பார்க்கும்
நிஜமா ? நிழலா? ஆனால்
எதையோ சாதித்ததாய் தோன்றும்
சுமைகள் விருப்பமா? பாரமா? கடமையா?
சற்று நேரத்தில் சிந்தனையில் மறக்கும்
மனவலிகள் உடல்வலிக்கு துணையாகும்
நம் துணைகள் பிரியும்போது
பயணம் இன்னும் தொலைவா? முடிவா?
ஏக்கம் மட்டுமே ஏங்கி நிற்கும்
யார் சமாதனம் சொன்னாலும்
சருமமும் கேசமும் சண்டையிடும்
உண்மையில் முதிர்ச்சி அனுபவம் தானே
சரி காத்திருக்கிறேன்
இளமை முழுதும் களையும் வரை
இளைப்பாற அமரும்போது கண்கள்
நம்மை கேட்காமல் வந்த வழி பார்க்கும்
நிஜமா ? நிழலா? ஆனால்
எதையோ சாதித்ததாய் தோன்றும்
சுமைகள் விருப்பமா? பாரமா? கடமையா?
சற்று நேரத்தில் சிந்தனையில் மறக்கும்
மனவலிகள் உடல்வலிக்கு துணையாகும்
நம் துணைகள் பிரியும்போது
பயணம் இன்னும் தொலைவா? முடிவா?
ஏக்கம் மட்டுமே ஏங்கி நிற்கும்
யார் சமாதனம் சொன்னாலும்
சருமமும் கேசமும் சண்டையிடும்
உண்மையில் முதிர்ச்சி அனுபவம் தானே
சரி காத்திருக்கிறேன்
இளமை முழுதும் களையும் வரை
Monday, May 3, 2010
வலியின் வழியில்
இனி திரும்பி பார்க்க
கூடாது என்று பலமுறை
நினைப்பேன் ஆனால் இயலாது...
படைப்புகளில் ஏன் ஏற்ற தாழ்வுகள்
கால்களும் கைகளும் இறுக்கமாய்
தாயின் கை பிடித்து தினமும்
நடை பயிலும் அந்த குமரிப்பெண்
தந்தையின் கண்ணீரை புரியாமல்
துடைக்கும் சிரித்த முக இளைஞன்
வரங்கள் சாபமானது இது தானா?
அன்றாட அடிப்படைகளுக்கு
உதவி தேடும்
ஒரு சில விரல் நுனிகள்
சாலைகளில் முகம் சிதைந்து நம்மை
கடக்கும் ஒரு சிலர் - வாழ்க்கை
என்பது வலியானால்
வாழ்வதில் என்ன அர்த்தம் ?
இருப்பவன் படைத்தலில்
கூட பற்றாக்குறை
நாம் குறை என்று நினைப்பது
ஒன்றுமேயில்லை என்று இப்படியா
சொல்வது இதயத்தில் அடித்து ?
சாலை தாண்டிவிட்டதும் சொன்னார்
அந்த பார்வையற்ற நண்பர்
"இனி நான் போறேன்,
நீங்க பாத்து போங்க"
மீண்டும் எனக்கு பாதை புரியவே
சில நிமிடங்கள் ஆனது..
கூடாது என்று பலமுறை
நினைப்பேன் ஆனால் இயலாது...
படைப்புகளில் ஏன் ஏற்ற தாழ்வுகள்
கால்களும் கைகளும் இறுக்கமாய்
தாயின் கை பிடித்து தினமும்
நடை பயிலும் அந்த குமரிப்பெண்
தந்தையின் கண்ணீரை புரியாமல்
துடைக்கும் சிரித்த முக இளைஞன்
வரங்கள் சாபமானது இது தானா?
அன்றாட அடிப்படைகளுக்கு
உதவி தேடும்
ஒரு சில விரல் நுனிகள்
சாலைகளில் முகம் சிதைந்து நம்மை
கடக்கும் ஒரு சிலர் - வாழ்க்கை
என்பது வலியானால்
வாழ்வதில் என்ன அர்த்தம் ?
இருப்பவன் படைத்தலில்
கூட பற்றாக்குறை
நாம் குறை என்று நினைப்பது
ஒன்றுமேயில்லை என்று இப்படியா
சொல்வது இதயத்தில் அடித்து ?
சாலை தாண்டிவிட்டதும் சொன்னார்
அந்த பார்வையற்ற நண்பர்
"இனி நான் போறேன்,
நீங்க பாத்து போங்க"
மீண்டும் எனக்கு பாதை புரியவே
சில நிமிடங்கள் ஆனது..
Subscribe to:
Posts (Atom)