எட்டாத மேஜை
இன்று என்னை அண்ணாந்து
பார்த்து வியந்தது
சாயம் போன கரும்பலகை
தனக்கும் வயதானதை
சாட்சியாய் சொன்னது
என்றும் விரும்பி அமரும்
முதல் வரிசை நாற்காலி
என்னை ஏக்கமாய் பார்த்தது
"தம்பி சௌக்கியமா?"
கணக்கு வாத்தியார்
கணக்கு வாத்தியார்
விசாரிப்பில் வியந்தேன்
அட இவருக்கு
இப்படியும் பேச தெரியுமா?
என் முதல் கவிதையை
ரசித்த தமிழாசிரியயை
நினைத்தபடி படித்த
பள்ளிக்கூடம் விட்டு
வெளிவந்தேன்
மீண்டும் உள்ளே செல்ல
ஆசை வந்தது
முதல் முறையாய் !!!
No comments:
Post a Comment