ஒவ்வொரு கவிதைக்கு
பின்னும் கனவுகளும்
ஏமாற்றங்களும் ஒளிந்திருக்கும் ...
இனிமையான தருணங்களும்
இயலாமையும் கொடிபிடிக்கும்
காதல் பாசம் பற்று
பிரிவு பக்தி நேசம்
என பல ரசங்கள்
எல்லாம் சொல்லும் கவிதைகள்
ஊமை மனதின்
மௌன குரலாய்
உற்ற நண்பனாய்
தலை சாய தோள்கொடுக்கும் !
இந்த 100வது பதிவு
என் முதல் தமிழாசிரியர்க்கும்
என் முதல் தோழிக்கும்
சமர்ப்பணம் !
No comments:
Post a Comment