காதலின் சுகம்
அவள் பெயரை
ஒரு மரத்தில்
எழுதி வைப்பேன் ..
அது நித்தமும்
பூக்கும்
ஆயிரம்
கவிதைப்பூக்கள்!!
அவள் அன்பை
காற்றில் சொல்லுவேன்
அனுதினமும்
பரப்பும்
அன்பென்றால் என்ன
என்னும்
நறுமணத்தை!!
அவள் புன்னகையில்
என் சுவாசம்
பிரியுமானால்
என் கல்லறை சொல்லும்
காதலின் சுகத்தை....
No comments:
Post a Comment