Tamil Kavidhaigal
Saturday, June 13, 2020
மறு வார்த்தை
உரையாடல் எல்லாம்
காதல் நிரம்பி
உன் பொய் கதைகளை
நிஜமென்று நம்பியதாய்
தலை ஆட்டி
உன்னை மேலும்
பேச சொல்லி
உன் கண்களில்
விழுந்து கிடப்பேன்
மறு வார்த்தை
பேசாமலே
Saturday, May 30, 2020
விழித்திரு
இல்லாத ஊருக்கு வழி தேடி
சொல்லாத பாதையில் செல்லாமல் சென்றடைந்து
கொண்டு செல்லாமலே
தொலைத்து இழந்ததாய்
வருந்தி உன்னையே
தேற்றி கொண்டதாய்
ஏமாற்றும்
பொல்லாத பொய்கள்
சொல்லி நிஜம் கூட
தன்னையே சந்தேகிக்கும்.
ஆராய்ந்து வாழ்ந்திடில்
கனப்பொழுதில் காணமல்
போவாய்...
விழித்திரு! விழித்திரு!
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)